ரஷ்ய வான்வழி தாக்குதலில் உக்ரைனின் ரசாயன ஆலையில் பெரும் சேதம்; அப்பகுதி மக்கள் அவதி
உக்ரைனில் இன்று அதிகாலை நடந்த ரஷ்ய வான்வழி தாக்குதலில் ரசாயன ஆலையில் சேதம் ஏற்பட்டு 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ந்திகதி படையெடுப்பில் ஈடுபட்டது. இது போரல்ல, ராணுவ நடவடிக்கை என ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.
உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷ்யா தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவை வலியுறுத்தி வருகின்றன. ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்து உள்ளன. எனினும், போரை கைவிட ரஷ்யாமறுத்து உள்ளது.
உக்ரைனும், தனியாளாக போரை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் சுமி நகர கவர்னர் ஓபிளாஸ்ட் டிமிட்ரோ ஜிவித்ஸ்கி(Oblast Dimitrov Jivitsky) கூறும்போது, ரஷ்ய படைகள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமிகிம்ப்ரோம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் சேதம் ஏற்பட்டு உள்ளது.
அந்த ஆலையில் இருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.
இதனால், அந்த பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாயு கசிவு பரவியுள்ளது என உக்ரைனின் ஊடக பத்திரிகை தெரிவித்து உள்ளது.