உக்ரைன் பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ரஷ்ய வீரர்கள்
போரின் போது ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை துஷ்பிரயோகம் செய்ததாக உக்ரைன் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே தொடர்ந்து 10வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா, ரஷ்ய வீரர்கள் உக்ரைன் நகரங்களில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறினார்.
இருப்பினும் குலேபா குற்றச்சாட்டுக்கு ஆதாரம் அளிக்கவில்லை. ரஷ்ய வீரர்கள் உக்ரேனிய நகரங்களில் பெண்களை துஷ்பிரயோகம் செய்யும்போது, சர்வதேச சட்டத்தின் செயல்திறனைப் பற்றி விவாதிப்பது நிச்சயமாக கடினம்.
ஆனால் லண்டனில் உள்ள சதாம் ஹவுஸில் நடந்த ஒரு நிகழ்வில், குலேபா, இந்த போரை சாத்தியமாக்கிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்யும் நாகரிகத்தின் ஒரே கருவி இது என்று கூறினார்.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் குலேபாவின் குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.