உக்ரைன் போர் ஒரு புறமிருக்க.....மற்றுமொரு நாட்டுக்குள் நுழைந்த ரஷிய போர் விமானங்கள்!
ரஷ்யா, உக்ரைனுடன் போரிட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் சுவீடன் நாட்டு வான் எல்லைக்குள் அணு ஆயுதங்களுடன் ரஷிய போர் விமானங்கள் நுழைந்துள்ள தெரிவிக்கப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி , நான்கு ரஷிய போர் விமானங்கள் சுவீடன் நாட்டின் வான் எல்லைக்குள் நுழைந்துள்ளன. உடனடியாக சுவீடன் விமானப்படை இரண்டு போர் விமானங்களை அனுப்ப, அவை சென்று அந்த ரஷிய விமானங்களை புகைப்படம் எடுத்துள்ளன.
அப்போதுதான் ஒரு திடுக்கிடவைக்கும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது , சுவீடன் எல்லைக்குள் நுழைந்த நான்கு ரஷிய போர் விமானங்களில் இரண்டு, அணு ஆயுதங்களை சுமந்துகொண்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ரஷிய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் நுழைந்தது தவறுதலாக நடந்த ஒரு விஷயம் அல்ல. அது வேண்டுமென்றே ரஷியா செய்து உள்ளதாக சுவீடன் குற்றம் சுமத்தியுள்ளது.
அதேவேளை சமீபத்தில் சுவீடனும், பின்லாந்தும் இணைந்து போர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டன. இதன் காரணமாக அவ்விரு நாடுகளும் நேட்டோ அமைப்பில் இணையக்கூடும் என்று கருதும் புதின் (Vladimir Putin) , இரு நாடுகளையும் பயமுறுத்தவே, வேண்டுமென்றே அணு ஆயுதங்களுடன் தன் போர் விமானங்களை தன் நாட்டு எல்லைக்குள் அனுப்பியதாக சுவீடன் நம்புகிறது.
ஏனெனில் , சுவீடனோ அல்லது பின்லாந்தோ நேட்டோ அமைப்பில் இணைந்தால், அவற்றிற்கெதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என சில நாட்கள் முன்பு புதின் எச்சரித்திருந்தார். அதேவேளை பனிப்போருக்குப் பின் சுவீடன் இராணுவத்துக்காக செலவு செய்வதை பெருமளவில் குறைத்திருந்தது.
ஆனால், 2014இல் ரஷியா கிரீமியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, உஷாரான சுவீடன் மீண்டும் தனது இராணுவத்தை வலுப்படுத்தத் தொடங்கியுள்ளதாக சுவீடன் குற்றம்சுமத்தியுள்ளது.