சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர்! சமந்தாவின் டிசைனர்
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர்தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தநிலையில் அதற்கு டிசைனர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவருமே தங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருவர்களுடைய பிரிவுக்கு பின்னர் பிரிவுக்கான காரணங்கள் குறித்து பல்வேறு வதந்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமந்தாவும் டிவிட்டரில் தன்பக்க விளக்கத்தை உருக்கமுடன் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா பிரிவுக்குக் காரணம் சமந்தாவின் டிசைனர் தான் என ரசிகர்கள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர், அதற்கு சமந்தாவின் டிசைனர் ப்ரீத்தம் ஜுகல்கர்தான் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் நாக சைதன்யாவின் அமைதி எனக்குக் மிகுந்த கவலையளிக்கிறது. நடிகை சமந்தா எனக்குச் சகோதரி போன்றவர். நான் அவரை எப்போதும் ஜிஜி என்று அழைப்பது அனைவருக்குமே தெரியும். எங்களை எப்படி ஒருவர்தொடர்புபடுத்திப் பேசமுடியும்? எனக்கு நாக சைதன்யாவைப் பல ஆண்டுகளாகத் தெரியும். எனக்கும் சமந்தாவுக்குமான உறவுமுறை என்னவென்று அவருக்கும் தெரியும். என அவர் தெரிவித்திருந்தார்.