சாஸ்கச்சுவானில் அவசரநிலை பிரகடனம்
கனடாவின் சாஸ்கச்சுவான் மாகாணத்தில் வடக்கு பகுதிகளில் காட்டுத்தீ பரவல் கடுமையாக இருப்பதையடுத்து, மாகாண அரசு அதிகாரப்பூர்வமாக அவசரநிலையை அறிவித்துள்ளது.
“வானிலை முன்னறிவிப்புகளைப் பார்த்தாலே கவலைக்கிடமாக இருக்கிறது.
மழை இல்லை, நிலைமை மேலும் மோசமாகவே போகும்,” என மாகாண முதல்வர் ஸ்காட் மோ தெரிவித்துள்ளார்.
அவசரநிலை அறிவிப்பின் கீழ் காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்காகவும், தீயணைப்புப் பணிகளை பலப்படுத்தவும் மாகாண அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மோ, காட்டுத்தீ அணைப்பு பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்றவர்கள் அருகிலுள்ள தீயணைப்பு முகாம்களில் தொடர்புகொண்டு தங்களை தயார் நிலையில் இருப்பதைக் குறிப்பிடுமாறு கேட்டுள்ளார்.
இந்நிலைமைக்கான ஒரு பகுதியாக, சுமார் 15 சமூகங்கள் இதுவரை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.