கட்டுப்பாடுகளில் இருந்து மீளும் Saskatchewan மாகாணம்
Saskatchewan மாகாணத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் 70% பேர் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Saskatchewan மாகாணத்தில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர். இதனையடுத்து, சுகாதார கட்டுப்பாடுகளில் தளர்வை ஏற்படுத்த மாகாண நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதனால், மாகாணத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் பார்கள் ஒரு மேஜையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை நான்கிலிருந்து ஆறாக அதிகரிக்க அனுமதிக்கப்படுகின்றன.
ஆனால் இரு மேஜைகளுக்கு இடையேயான இடைவெளி கண்டிப்பாக கண்காணிக்கப்படும். மட்டுமின்றி வழிபாட்டுத் தலங்களில் 30% பேர்கள் அல்லது 150கும் குறைவானவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுவெளியில் கூடுகை என்பது 150 பேர்கள் என அனுமதிக்கப்படும். குடியிருப்பினுல் விருந்தினர்கள் கூடுகை என்பது 10 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
மேலதிக தகவல்கள் அனைத்தும் Saskatchewan மாகாண இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.