எங்களின் குழந்தைகளையாவது காப்பாற்றுங்கள்: மனதை உருக்கும் காணொளி
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கும் தாலிபான்களால் நாடு முழுவதும் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, தாலிபான்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே மோதல்கள் தொடங்கி விட்டன. குறிப்பாக ஜலாலாபாத் நகரில் தாலிபான்களின் கொடியை இறக்கி விட்டு ஆப்கானிஸ்தான் தேசியக்கொடியை போராட்டக்காரர்கள் ஏற்றினர். அங்கு நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதைப்போல கோஸ்ட் மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் மூண்டதை தொடர்ந்து மாகாணம் முழுவதும் 24 மணி நேர ஊரடங்கை தாலிபான்கள் அமல்படுத்தி உள்ளனர்.
HEARTBREAKING moments of separation, as footage reportedly shows families passing children - even babies - over a fence at #Kabul airport. #Afghanistan
— RT (@RT_com) August 19, 2021
Follow us on Telegram https://t.co/4xzXvo6aO3 pic.twitter.com/ULMKvgWx4I
காபூல் விமான நிலையத்தில் வெளியேறுவதற்கு சுமார் 6 ஆயிரம் பேர் காத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க ராணுவவ வீரர்கள் பாதுகாப்பில் உள்ள இவர்கள் விரைவில் விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் (Joe Biden) அரசு உறுதியளித்துள்ளது.
இந்நிலையில், அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாதவர்கள், தங்கள் குழந்தைகளாவது உயிர் பிழைக்கட்டும் என அமெரிக்க ராணுவத்தினரிடமும், தப்பிச் செல்லும் நபர்களிடமும் தங்கள் குழந்தைகளை கொடுத்து அனுப்புகின்றனர்.
ஆனால் அவ்வாறு அழைத்துச் செல்ல தங்களுக்கு உரிமையில்லை என வீரர்கள் கண்கலங்கியவாறு தாய்மார்களிடமே குழந்தைகளை ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பான கண்ணீர் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.