ஸ்கார்பரோ தொடக்கப் பள்ளியை மூடிய நிர்வாகம்
ஸ்கார்பரோவில் கொரோனா பரவலை அடுத்து தொடக்கப் பள்ளி ஒன்று மூடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பள்ளியில் 13 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே, பள்ளி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
வெளியாகியுள்ள தகவலில், 11 மாணவர்களுக்கும் 2 ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவை பொறுத்தமட்டில், செப்டம்பர் மாதம் தொடங்கி கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான தரவுகளின் அடிப்படையில் பள்ளியில் இருந்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 913 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே பள்ளிகளில் கொரோனா பாதிப்பு என்ணிக்கை சரிவடைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.