ஆப்கானில் சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை: பெண்கள் மீது தலீபான்கள் தூப்பாக்கிச்சூடு
ஆப்கானில் சிறுமிகள் பள்ளிகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவுக்கு எதிர்ப்பு போராட்டம் நடத்திய பெண்கள் மீது தலிபான்கள் தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து தெரியவருவது,
ஆப்கான் தலைநகர் காபூலை கடந்த மாதம் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு தலீபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ஆப்கானில் பல பகுதிகளிலும் தலீபான்களின் எச்சரிக்கையையும், தடையையும் பொருட்படுத்தாமல் எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை செப்டெம்பர் முதல் பள்ளிகளுக்கு செல்ல சிறுமிகளுக்கு தலீபான்கள் தடை உத்தரவு பிறப்பித்தனர். இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது தலீபான்கள் தூப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பில் காபூல் சிறப்பு படையின் தலைவர் கூறுகையில், போராட்டத்தின் போது பாதுகாப்பு அலுவலர்களுடன் அவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.