ஆசிரியரின் அத்துமீறல்... பல மில்லியன் இழப்பீடு கேட்டு பள்ளி வாரியம் மீது வழக்கு
ஒன்ராறியோவில் மாணவி ஒருவர் பள்ளி ஆசிரியரால் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட குடும்பம் தற்போது பல மில்லியன் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஜெஃப் பீற்றர்ஸ் என்ற ஆசிரியரால் பாதிக்கப்பட்ட இரு மாணவிகள் சார்பில் தொடுக்கப்பட்ட தனிநபர் சிவில் வழக்குகளில் இதுவும் ஒன்று.
இந்த இரு வழக்குகளிலும் ஜெஃப் பீற்றர்ஸ் மற்றும் கிழக்கு ஒன்ராறியோவின் கத்தோலிக்க மாவட்ட பள்ளி வாரியமும் இணைக்கப்பட்டு பல மில்லியன் டொலர் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
2013 மற்றும் 2016ல் பெர்தில் உள்ள செயின்ட் ஜான் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் இருவரை ஜெஃப் பீற்றர்ஸ் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கடந்த ஏப்ரல் மாதம் உறுதி செய்யப்பட்டது.
குறைந்தது 5 மாணவிகள் ஜெஃப் பீற்றர்ஸ் ஆசிரியருக்கு எதிராக மொழி அளித்துள்ளனர். ஆனால் இரு வழக்குகளில் மட்டும் அவர் தற்போது குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் குறித்த முன்னாள் ஆசிரியருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.