ரொறன்ரோ தொடக்கப்பள்ளி ஆசிரியர் குறித்து பெற்றோர்களுக்கு அனுப்பட்ட கடிதம்
ரொறன்ரோவில் சிறார் துஸ்பிரயோக வழக்கு விசாரணை தொடர்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய ஆசிரியர் கடந்த 2014 முதல் சுமார் இரண்டாண்டு காலம் ரொறன்ரோவில் உள்ள ஒரு குடியிருப்பில் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அந்த 7 வயது குழந்தையை குறித்த ஆசிரியர் பலமுறை துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக தற்போது 41 வயதாகும் Gianni Jarman என்ற அந்த ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோ மாவட்ட பள்ளி வாரியத்தின் கீழில் செகார்ட் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் ஜார்மன். இந்த நிலையில் குறிப்பிட்ட பள்ளி சார்பில் பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அதில், துஸ்பிரயோக வழக்கில் குறித்த ஆசிரியர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வரையில் அவர் பள்ளிக்கு திரும்ப மாட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஜார்மன் மீது தற்போது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. செப்டம்பர் 17ம் திகதி அவர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.