சுவிட்சர்லாந்து தொடர்பில் எச்சரிக்கை விடுத்த அறிவியலாளர்!
சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்த குளிர்காலம் கடினமானதாக இருக்கக்கூடும் என சுவிஸ் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் எச்சரித்துள்ளார்.
கொரோனா நிலவரம் குறித்து சுவிஸ் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவரான Tanja Stadler கூறுகையில், அடுத்த சில மாதங்களுக்கு அரசு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டியிருக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.
புதிதாக நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், 30,000 பேர் வரை கூடுதலாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
அதேவேளை , என்ன நடவடிக்கைகள் என்பதை அரசியல்வாதிகள்தான் முடிவுசெய்யவேண்டும் எனவும் அவர் கூறினார்.
மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மிகவும் பயனளிக்கக்கூடியவையாக உள்ளன என்றும் கூறிய அவர், பணித்தலங்களிலும் சுகாதார பாஸ் அறிமுகம் செய்யப்படவேண்டும் எனவும் அவர் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகின்றது.