பூமியில் இருந்து சென்ற விஞ்ஞானிகள் சுனிதா வில்லியம்ஸை சந்தித்தனர்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்ட டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை எட்டியுள்ளது.
நேற்று (16) இந்த விண்கலம் அங்கு சேர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது.
இந்த விண்கலத்தில் நாசா விஞ்ஞானிகள் ஆன் மெக்ளெய்ன், நிகோல் ஏயெர்ஸ், ஜப்பானின் ஜாக்ஸா நிறுவனம் சார்ந்த டகூயா அனிஷி, ரஷியாவின் ரோஸ்கோமோஸ் நிறுவனத்தை சேர்ந்த கிரில் பெஸ்கோவ் ஆகிய நால்வரும் டிராகன் விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் பத்திரமாக இறங்கினர்.
கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ், பட்ச் வில்மோர் ஆகியோரை பூமியில் இருந்து சென்ற விஞ்ஞானிகள் சந்தித்தனர்.
இந்த விஞ்ஞானிகள் உற்சாகமாக கைதட்டி சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகிய இருவரும் வரவேற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய பின்னர் அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இறுதியாக பூமிக்குத் திரும்புகிறார்.
நாளை செவ்வாய்க்கிழமை (18) மாலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தின் மூலமாக அவர் நமது கிரகத்தை வந்தடைவார் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.