எகிப்தில் அதிர்ச்சி! மனிதர்களை வேட்டையாடும் கொடிய விஷமுள்ள தேள்! 3 பேர் பரிதாப பலி
எகிப்தில் வசிக்கும் மக்களை கொடிய விஷமுள்ள தேள் கடித்ததால் பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெற்கு எகிப்து நாட்டில் உள்ள நைல் ஆற்றோரத்தில் கடந்த சனிக்கிழமை கடுமையான புயல் மற்றும் மிக அதிக கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் கொடிய விஷம் நிறைந்த fat-tailed தேள்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கும் வீட்டிற்குள் புகுந்துள்ளது. அந்த தேள் சுமார் 453 அப்பாவி மக்களை கடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மற்றவர்கள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த எகிப்த் மருத்துவர்கள் தற்போது தேள் கடிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
உலகிலேயே அதிக நச்சுகளை வெளியிடும் தேள் வகைகளில் ஒன்றான fat-tailed வகை எகிப்தில் உள்ளது. இந்த தேளின் நச்சு மனிதர்களை ஒரு மணி நேரத்துக்குள் கொன்றுவிடக்கூடிய வீரியம் கொண்டதாக கூறப்படுகிறது.