உக்ரைனில் சிக்கிய முதல் ரஷ்யக் கைதிகள்; புத்திக்கு உரைப்பது போல் சத்தமிட்ட பெண்மணி
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போரில், தங்களிடம் சிக்கிய முதல் ரஷ்யக் கைதிகள் என இருவரது புகைபடத்தை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் இன்று மூன்றாவது நா:ளாகவும் தீவிரம் அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த ரஷ்ய ராணுவத்திடம் பெண் ஒருவர் தைரியமாக சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலானது.
அந்த பெண்மணி தங்கள் நாட்டில் விளைந்த சூரியகாந்தி மலர்களின் விதைகளை உங்களின் சட்டை பைக்குள் போட்டுக் கொள்ளுங்கள் ஏனெனில், நீங்கள் இறந்த பின்னராவது அதில் இருந்து பூக்கள் பூக்கட்டும் என்று புத்திக்கு உரைப்பது போல சத்தம் போட்டார்.
In this video, a Ukrainian woman is confronting Russian soldiers in the Henychesk, Kherson region of #Ukraine.
— Silenced Dogreat (@DogreatSilenced) February 25, 2022
She asks them why they came to our land and urges to put sunflower seeds in their pockets [so flowers would grow when they die on Ukrainian .#UkraineStrong pic.twitter.com/zl5EmhLN99
இந்த நிலையில் தங்களிடம் சிக்கிய முதல் ரஷ்ய கைதிகள் என இருவரது புகைப்படத்தை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் ஆயுதங்களுடன் சிக்கிய இரு ரஷ்ய வீரர்களும் தங்களது முதல் போர்க் கைதிகள் என்று உக்ரைன் சுட்டிகாட்டி உள்ளது.
இதன்படி எதற்கும் கட்டப்படாமல் வான்வழித் தாக்குதலை தீவிரப்படுத்திவரும் ரஷ்யாவுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் தலைநகர் மாஸ்கோவில் பெருந்திரளாக கூடி, மக்கள் போருக்கு எதிராக ஆவேச குரல் எழுப்பினர்.
இதே போல உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு அண்டை நாடுகளிலும் ரஷ்யாவுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.