பிரான்ஸில் திடீரென குவிந்த பாதுகாப்பு படையினர்!
பிரான்ஸில் குற்ற செயல்கள் பாரிய அளவில் அதிகரித்து வருவதனால் பொது போக்குவரத்து பாதுகாப்புப் படையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, பிரான்ஸ் முழுவதும் 30க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த பொதுப் போக்குவரத்து பாதுகாப்புப் படையை (BSTC) உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க 10 முதல் 20 பொலிஸ் அதிகாரிகள் வரையில் கடமையில் ஈடுபடுப்படவுள்ளதாக உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பல மாதங்களாக Nice, Saint-Etienne ஆகிய இரண்டு பகுதிகளில் இவ்வாறான பாதுகாப்பு படை ஒன்று நடைமுறையில் உள்ளது. இரண்டு நகரங்களுக்கு மேலதிகமாக, நாட்டில் 37 நகரங்களில் ஒரு தேசிய அமைப்பு சேவையில் உள்ளது.
அதற்கமைய, பொது போக்குவரத்து பாதுகாப்பு படைகள், ரயில் நிலையங்கள், பொது போக்குவரத்து நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து வலையமைப்புகள் ஆகியவற்றிற்கான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோந்து நடவடிக்கைகள் குறிப்பாக அதிக செயல்திறனுக்காக குற்றச்செயல்கள் மிக அதிகமாக இருக்கும் நேரங்களை முன்னெடுக்கப்படும். பிரான்ஸில் பொது போக்குவரத்தில் பாதுகப்பற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
மேலும் அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அதிக வெளிநாட்டவர்கள் பிரான்ஸிற்கு வருகைத்தருவார்கள்.
இந்த விடயங்களை கருத்திற் கொண்டு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒலிம்பிக்கிற்கு பின்னரும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே பல தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.