முகநூலில் சொக்லேட் விற்பனை; ஐந்து இலட்சம் வரை மோசடி
முகநூலில் சொக்லேட் விளம்பரம் செய்த பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு இவர் ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தையும் மோசடி செய்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
அதனை தொடர்ந்து கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மோசடி
பலவிதமான சொக்லேட்டுகளை விற்பதாக ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்துள்ளார். அதன்படி விண்ணப்பித்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு இந்த மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள மாணவி கிரம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்பதிவுகள் அதே பாடசாலையின் தலைமை மாணவர் தலைவராக இருந்த 22 வயது இளைஞர் ஒருவரின் கணக்கு எண்ணில் வரவு வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இருவரையும் பொலிஸார் வரவழைத்து விசாரித்தபோது மாணவியின் காதலன் எனக் கூறி 22 வயது வாலிபர் பணம் தருவதாக மோசடி செய்தது தெரியவந்தது.
தலைமை பொலிஸ் பரிசோதகர் விசாரணைகளை மேற்கொண்டு இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தியதையடுத்து இருவரையும் ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.