முன்னாள் அதிபர் டிரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சதிப்புரட்சியில் ஈடுபட முயற்சித்ததாக அவர்மீது பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் 2021 ஜனவரி 6 ஆம் திகதி நடந்த வன்முறைகள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் டிரம்ப் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகளை அப்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஏற்றுக்கொள்ள மறுத்தார். தேர்தல் பெறுபேறுகளை சம்பிரதாயமாக அறிவிக்கும் நடவடிக்கை 2020 ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்றபோது, ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இவ்வன்முறைகளை தடுப்பதற்குப் பதிலாக, வன்முறையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ட்ரம்ப் (Donald Trump) செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இவ்வன்முறைகள் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் தெரிவுக்குழு, விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைகளின் போது ட்ரம்பின் (Donald Trump) நெருங்கிய தரப்புகள் அளித்த வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்ட வீடியோக்களையும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு நேற்று வெளியிட ஆரம்பித்துள்ளது. அதில் தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கூறுவது தவறு என தான் பல தடவைகள் அவரிடம் தெரிவித்தாக முன்னாள் சட்ட மா அதிபர் பில் பார் அளித்த வாக்குமூலமும் ஒளிபரப்பப்பட்டது.
அத்துடன் தனது தந்தை கருத்தை பில் பார் மறுத்ததை தான் ஏற்றுக்கொண்டதாக ட்ரம்பின் (Donald Trump) மகள் இவன்கா ட்ரம்ப் ( Ivanka)அளித்த வாக்குமூலமும் ஒளிபரப்பப்பட்டது. விசாரணைக்குழுவின் உப தலைவரான ட்ரம்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லிஸ் சென்னி, கூறுகையில், வன்முறைக் கும்பலை ஜனாதிபதி ட்ரம்ப் அழைப்பித்தார்.
அக்கும்பலை திரளச் செய்தார். தாக்குதலுக்கான தீயை பற்றவைத்தார்’ என்றார். ஜனநாயகக் கட்சி அங்கத்தவரான பென்னி தொம்சன் கூறுகையில், ஜனவரி 6 ஆம் திகதி சம்பவங்கள், ஒரு புரட்சியின் உச்சகட்டமாகும்.
அவ்வன்முறை ஒரு விபத்து அல்ல என்றும் அவர் கூறினார்.
‘நாடாளுமன்றத்துக்கு அணி வகுத்துச் சென்று, பைடனுக்கு சம்பிரதாயபூர்வமாக அதிகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைமாற்றும் செயற்பாட்டைத் தடுப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதியின் ஊக்கப்படுத்தலினால் கலகக்காரர்கள் செயற்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.