3 வயது மகளை கொன்ற கனேடிய தந்தைக்கு நீதிமன்றம் வழக்கும் தண்டனை ?
கனடாவில் கொடூரமான முறையில் மூன்று வயது மகளை தாக்கிக் கொன்ற சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
தனது மூன்று வயது மகளை கொடூரமாக தாக்கியதாக குறித்த நபர் ஒப்புக் கொண்டிருந்தார்.
கடந்த 2021ம் ஆண்டில் ஜெமியா பொன்டாலியான் என்ற சிறுமி தாக்கிக் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தையான பிராங்க் நவுசிகிமானா என்பவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
தாயின் வாகனத்தில் சிறுமி வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட காரணத்தினால் குறித்த நபருக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்குமாறு அரச தரப்பு சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
இந்த நிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் தண்டனையை குறைக்குமாறு குறித்த நபரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
வழக்கு முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் தண்டனை விதிப்பு குறித்த அமர்வுகளே தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
விரைவில் குறித்த நபருக்கான தண்டனை குறித்து அறிவிக்கப்படுகின்றது.