பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டு பூனை தாக்குதலுக்கு இலக்கான பெண்... ஆபத்தான நிலையில் மீட்பு
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கூகர் எனப்படும் காட்டு பூனை தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவர் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
குறித்த தகவலை பிரிட்டிஷ் கொலம்பியா பாதுகாப்பு அலுவலர் சேவையானது தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது செவ்வாய்க்கிழமை காலை அந்த பெண்மணியின் குடியிருப்பு பகுதியிலேயே நடந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற சிறப்பு குழுவினர் மற்றும் அவசர உதவிக்குழுவினர் தாக்குதலுக்கு இலக்கான பெண்மணியை மீட்டுள்ளனர்.
தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிய வந்ததும் உடனடியாக மூன்று ஆம்புலன்ஸ் சேவைகளை சாலை மார்கம் அனுப்பி வைத்துள்ளதுடன், ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் ஒன்றும் சம்பவ பகுதிக்கு விரைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த பெண்மணி படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பெண்ணின் நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் அறியப்படவில்லை. முன்னதாக, மெட்ரோ வான்கூவரின் போர்ட் மூடி பகுதியில் இந்த மார்ச் மாத துவக்கத்தில் தொடர்ச்சியான கூகர் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நாய்கள் மீதான தாக்குதல்களும் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறப்பு குழுவினரால் ஒரு கூகர் பிடிக்கப்பட்டு கருணைக்கொலை செய்ய வழிவகுத்ததாக தெரிய வந்துள்ளது.