ருமேனியா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து! 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
ஐரோப்பிய நாடான ருமேனியாவின் தென்கிழக்கே அமைந்துள்ள கான்ஸ்டெண்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த இந்த தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர் எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் பலர் மருத்துவமனை ஜன்னல் வழியாக வெளியே குதித்து உயிர் தப்பினர் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் உள்பட 113 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக மருத்துவமனை வளாகம் முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
இந்த தீவிபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
மேலும் மருத்துவமனையில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். +