தூங்க கூட விடுவதில்லை; கணவர் தொடர்பில் அம்பலப்படுத்திய பெண் அரசியல்வாதி!
இங்கிலாந்தை சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன் (Kate Kniveton)திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த பெண் அரசியல்வாதி கேட் எலிசபெத் நைவ்டன்(வயது 54) (Kate Kniveton) . இவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பர்ட்டன் தொகுதி எம்.பி.யாக 2019 முதல் 2024 வரை பதவி வகித்தார்.
2 பெண்களுக்கு சுமார் 2,000 ஆபாச குறுஞ்செய்தி
இவர் (Kate Kniveton) தனது முன்னாள் கணவரும், முன்னாள் எம்.பி.யுமான ஆண்ட்ரூ கிரிபித்ஸ் (MP Andrew Griffiths) மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கேட் எலிசபெத் (Kate Kniveton) எம்.பி.யாக வெற்றி பெற்ற பர்ட்டன் தொகுதியில், அவருக்கு முன்பு 2010 முதல் 2019 வரை எம்.பி. ஆக இருந்தவர் ஆண்ட்ரு கிரிபித்ஸ் ( Andrew Griffiths) .
இவர்கள் இருவரும் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 2018-ம் ஆண்டு பிரிந்து விட்டனர். ஆண்ட்ரூ கிரிபித்ஸ் ( Andrew Griffiths) தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக சித்ரவதை செய்ததாகவும் கேட் எலிசபெத் (Kate Kniveton) கோர்ட்டில் தெரிவித்திருந்தார்.
இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தெரஸா மே (Theresa Mary May )ஆட்சின்போது, செல்வாக்கு மிகுந்த அரசியல் தலைவராக வலம் வந்த ஆண்ட்ரூ ( Andrew Griffiths) , பெண்கள் உரிமைகளுக்காக தீவிர பிரசாரங்களை மேற்கொண்டவர்.
அதே சமயம், இவர் (Andrew Griffiths) பதவியில் இருந்தபோது தனது அலுவலகத்தில் பணியாற்றிய 2 பெண்களுக்கு சுமார் 2,000 ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி சர்ச்சையில் சிக்கியதால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு ஆண்ட்ரூ-கேட் தம்பதி பிரிவதற்கு முன்பு, அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்ற பின்னர், தனது குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க கோரி கோர்ட்டில் ஆண்ட்ரூ வழக்கு தொடர்ந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த கேட், தன்னையும், தன் குழந்தையையும் ஆண்ட்ரூ ( Andrew Griffiths) கடுமையாக துன்புறுத்தினார் என்று கோர்ட்டில் தெரிவித்தார்.
கேட் எலிசபெத்திற்கு சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு
இந்த வழக்கின் முடிவில் கேட் எலிசபெத்திற்கு (Kate Kniveton) சாதகமாக கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையின் கசப்பான அனுபவங்கள் குறித்து கேட் எலிசபெத் (Kate Kniveton) ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் தனது கணவரால் ( Andrew Griffiths) தனக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் குறித்து கேட் அம்பலப்படுத்தியுள்ளார்.
நான் தூங்கும்போது கூட உல்லாசத்தில் இருக்க சொல்லி வற்புறுத்துவார். கட்டிலில் இருந்து எட்டி மிதித்து கீழே தள்ளுவார். அனைத்தையும் கண்ணீருடன் பொறுத்துக்கொண்டேன். எனது 2 வயது மகள் பசியில் அழுதபோது அவளிடம் மிகுந்த ஆக்ரோஷத்துடன் நடந்து கொண்டார்.
அது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது" என்று கூறியுள்ளார். மேலும் இங்கிலாந்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் இருக்கும் குறைபாடுகள் குறித்தும் தனது ஆவணப்படத்தில் கேட் எலிசபெத் (Kate Kniveton) பேசியுள்ளார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க குடும்ப நல நீதிமன்றங்கள் தவறிவிடுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.