கனடாவில் உறங்கிகொண்டிருந்த பெண் ; திடீரென விழுந்த ராட்சத கல்லால் அதிர்ச்சி
கனடாவில் நிம்மதியாக உறங்கிகொண்டிருந்த பெண் ஒருவரின் வீட்டில் திடீரென ராட்சத கல் ஒன்று விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கனடா பிரிட்டிஷ் கொலம்பிய பகுதியில் வசிக்கும் ரூத் ஹாமில்டன் பெண் ஒருவர் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென்று விண்வெளியில் இருந்து ஒரு விண்கல் வீட்டின் கூரையில் விழுந்துள்ளது.
இந்த சம்பவம் அக்டோபர் 4 இரவு நடந்தது என்று கூறப்படுகிறது. வீட்டின் கூரையை துளைத்து அந்த விண்கல் பெண்ணின் படுக்கையில் அவருக்கு மிக அருகில் இருந்த தலையணை மீது விழுந்தது. இந்நிலையில் பெண்ணிடம் இருந்து சில அங்குல தூரத்தில் விழுந்ததால், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
இதுகுறித்து வீட்டில் இருந்த ஹாமில்டன் விக்டோரியா கூறுகையில், “நான் திடீரென்று பெரிய சத்தம் கேட்டு எழுந்து லைட்டை ஆன் செய்தேன். என்ன நடந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்கு முன் ஒரு இரவில், லூயிஸ் ஏரி அருகே விண்கற்கள் விழுந்ததை மக்கள் பார்த்தனர்” என்றார். இந்த திகிலூட்டும் சம்பவத்தில், ஹாமில்டன் தெய்வாதீனமாக தப்பியுள்ளார். படுக்கை அறை லைட்டை ஆன் செய்ததும், அவரது தலையணையில் ஒரு விண்கல் விழுந்திருப்பதைக் கண்டார்.
உடனே அவர் உதவி எண்ணான 911 க்கு போன் செய்து அருகில் உள்ள கட்டுமான தளத்திலிருந்து வந்ததா என்று கண்டுபிடிக்க முயன்றார்.
எனினும் , விசாரணையில், விண்வெளியில் இருந்து ஒரு பிரகாசமான வெளிச்சம் வந்ததாகக் அங்கிருந்த மக்கள் கூறினர். மேலும் அந்த , விண்கல்லை தன் பேரக்குழந்தைகள் பார்க்க வேண்டும் என அவர் பாதுகாத்து வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.