பிரான்ஸில் யாழ் குடும்பஸ்தர் கொலைப்பட்ட சம்பவம் உண்மைதானா? நீடிக்கும் மர்மம்
பிரான்ஸில் யாழ் மல்லாகத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டு சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்டு நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வெளியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த நபர் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் (26) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் அவரது மனைவிக்கு அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் தனது கணவரை தொலைபேசியில் அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என குறித்த வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காணாமல்போன கணவரை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளிடம் மனைவி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் விசாரணை நடத்திய பிரான்ஸ் பொலிஸார் , அவர் கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியது.
இருப்பினும் குறித்த நபர் காணாமல் போன சம்பவம் தொடர்பிலும், கொலைப்பட்ட சம்பவம் தொடர்பிலும் பிரான்ஸ் பொலிஸார் இதுவரையில் எந்தவொரு உறுதியான தகவலையும் வெளியிடவில்லை.