இந்தியாவில் 4,13,670 பிச்சைக்காரர்கள் ; ஆய்வில் வெளியான அதிர்ச்சித்தகவல்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 81,224 பிச்சைக்காரர்கள் உள்ளனர். 2-வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலங்களவையில், இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் , 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 4,13,670 பிச்சைக்காரர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,21,673 பேர்.பெண்கள் 1,91,997 பேர். இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 81,224 பிச்சைக்காரர்கள் உள்ளனர். 2-வது இடத்தில் உள்ள உத்தரபிரதேசத்தில் 65,835 பிச்சைக்காரர்கள் உள்ளனர்.
ஆந்திராவில் 30,218 பிச்சைக்காரர்களும், பீகாரில் 29,723 பிச்சைக்காரர்களும், மத்திய பிரதேசத்தில் 28,695 பிச்சைக்காரர்களும், ராஜஸ்தானில் 25,853 பிச்சைக்காரர்களும் உள்ளனர். தலைநகர் டெல்லியில் 2,187 பேர் உள்ளனர். சண்டிகரில் 121 பிச்சைக்காரர்கள் மட்டுமே உள்ளனர்.
லட்சத்தீவில் இரண்டு பிச்சைக்காரர்கள் மட்டுமே உள்ளனர் என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை குறித்து இதில் குறிப்பிடவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.