நடுங்கவைத்த பிறந்தநாள் கொண்டாட்டம்... பொலிசார் வெளியிட்ட முக்கிய தகவல்
ரெக்ஸ்டேல் பகுதியில் பிஞ்சு குழந்தையின் பிறந்தநாள் கொண்டாத்தின் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று பிள்ளைகள் உட்பட நால்வர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதில் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வந்த 5 வயது குழந்தை தற்போது ஆபத்து கட்டத்தை கடந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
லேசான காயமுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை தற்போது குடியிருப்புக்கு திரும்பியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்துள்ள பொலிசார், தாக்குதல்தாரிகள் கண்டிப்பாக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் எனவும், சம்பவத்திற்கு பிறகு நடந்தே சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் தப்பியதாக குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு வாகனம் இப்பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள பொலிசார், விசாரணையின் தொடக்கத்தில் இருப்பதால் அது தொடர்பில் வெளிப்படையாக கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளை மட்டும் குறி வைக்கப்பட்டுள்ளதாக தாங்கள் நம்பவில்லை என கூறியுள்ள பொலிசார், விசாரணை அதிகாரிகளுக்கு பல கோணங்களில் பல்வேறு சந்தேகம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் முனைப்பில் தற்போது விசாரணை அதிகாரிகள் உள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஒரு குடியிருப்பில் முழுமையான சோதனையிட தேவையான ஆணையை பெற பொலிஸ் தரப்பு முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.