ஏஜாக்ஸில் வீடுகள் மீது துப்பாக்கிச்சூடு
கனடாவின் ஏஜாக்ஸ் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், இரு வீடுகள் மற்றும் பல வாகனங்கள் குண்டுகளால் சேதமடைந்துள்ளதாக டர்ஹாம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் 18ஆம் திகதி அதிகாலை 12:40 மணியளவில், அப்ஸ் கோர்ட் Abbs Court மற்றும் வில்லர் அவன்யூ Willer Avenue பகுதிக்கு அருகில் ஆயுதம் வைத்திருந்த ஒருவரைப் பற்றி கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் விரைந்து சென்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில், சாலையில் பல குண்டுக்காவிகள் (shell casings) கண்டுபிடிக்கப்பட்டன என்றும், இரு வீடுகளும் வாகனங்களும் குண்டுகள் தாக்கியதில் சேதமடைந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டின் போது, வீடுகளில் வசிப்பவர்கள் உள்ளே இருந்தாலும், யாருக்கும் உடல் காயம் ஏற்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது, டர்ஹாம் பொலிசார் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று ஆண்களை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அந்த நேரத்தில் அவர்கள் கருப்பு உடை அணிந்திருந்ததாகவும், கருப்பு நிற காரில் இருந்ததாகவும், அதிவேகமாக அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.