இந்தோனேசியாவுடன் கைக்கோர்க்கும் சிங்கப்பூர்!
சிங்கப்பூருக்கான கோழி இறைச்சி ஏற்றுமதியை இந்தோனேசியா நாளை தொடங்கவிருக்கின்றதாக அந்நாட்டின் வேளாண்மை அமைச்சில் உள்ள மூத்த அதிகாரி ட்ரி மேலா சாரி CNA-யிடம் கூறினார்.
முதலில் உறைந்த கோழியிறைச்சி சிங்கப்பூருக்கு அனுப்பப்படும் என்று அவர் சொன்னார். இந்தோனேசியாவில் உள்ள 3 நிறுவனங்களுக்குச் சிங்கப்பூருக்குள் கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.
அதில் இரு நிறுவனங்கள் இன்னும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் திருவாட்டி மேலா சாரி குறிப்பிட்டார்.
மேலும் 12 நிறுவனங்கள் ஏற்றுமதி அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளன.
நிறுவனங்களும் அவற்றின் பண்ணைகளும் சோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு பதிலளித்துள்ளது.