ஸ்காப்ரோ கொள்ளைச் சம்பவத்தில் ஆறு பேர் மீது துப்பாக்கிச் சூடு
கனடாவின் ஸ்காப்ரோ பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றின் போது ஆறு பேர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
மிட்லாண்ட் அவன்யூ பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள வர்த்தக கட்டடமொன்றை ஐந்து சந்தேக நபர்கள் உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
இந்த கட்டடத்தில் வசித்தர்களின் உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. கொள்ளையிடப்பட்டது மட்டுமன்றி அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆறு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ஆறு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் அவர்கள் அனைவருக்கும் உயிராபத்து கிடையாது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.