குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகள்; அதிர்ச்சியில் பெற்றோர்கள்!
பிரான்சில் பள்ளி குழந்தைகள் விரும்பிக் குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகளால் எழுதப்பட்டிருப்பது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகள் புகார் அளித்துள்ளார்கள்.
பிரான்ஸ் நாட்டில் பள்ளி குழந்தைகள் அதிகமாக விரும்பி குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர்கள் குளிர்பான பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள அவதூறு வார்த்தைகளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
அது மட்டுமின்றி குழந்தைகள் குடிக்கும் அந்த குளிர்பான பாட்டிலில் பொலிஸ் அதிகாரிகள் குறித்தும் அவதூறு வார்த்தைகளால் அச்சிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாரிகள் இந்த குளிர்பானத்தை தயாரிக்கும் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளார்கள்.
இதற்கிடையே குறித்த குளிர்பான பாட்டில்களை விற்கப் போவதில்லை என சில சூப்பர் மார்க்கெட்டுகள் அதனை வாங்குவதற்கு மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.