மனைவியிடம் வாங்கிய அறை ; மேக்ரானை கேலி செய்த ட்ரம்ப்! பிரான்ஸ் அதிபர் பதிலடி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (ஏப்ரல் 1, 2026) வெள்ளை மாளிகையில் நடந்த மதிய விருந்தின் போது, பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இதன்போது பிரெஞ்சு உச்சரிப்பைப் போன்று போலியாகப் பேசி மேக்ரானை கேலி செய்த ட்ரம்ப், மேக்ரானின் மனைவி அவரை மிகவும் மோசமாக நடத்துகிறார். 2025-இல் அவர் வாங்கிய அறையிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரில் அமெரிக்காவிற்கு உதவாத நேட்டோ நாடுகள்
நேட்டோ நாடுகள் ஈரான் போரில் அமெரிக்காவிற்கு உதவாததைக் கண்டிக்கும் நோக்கில் மேக்ரானை இவ்வாறு ட்ரம்ப் விமர்சித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தென் கொரியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ட்ரம்ப்பின் இந்தப் பேச்சுக்கு இன்று (ஏப்ரல் 3, 2026) நேரடிப் பதிலடி கொடுத்துள்ளார். ட்ரம்ப்பின் கருத்துக்கள் நேர்த்தியானவை அல்ல. அவை ஒரு தரம் வாய்ந்த தலைவருக்குரியவை அல்ல (Neither elegant nor up to scratch) என்று அவர் சாடியுள்ளார்.
“நாம் இப்போது உலகத்தின் எதிர்காலத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இது ஒன்றும் கேளிக்கை நிகழ்ச்சி (Show) அல்ல என்று குறிப்பிட்ட மேக்ரான், ஒரு நாட்டின் அதிபர் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசுவது வருத்தமளிப்பதாகத் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார்.
முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை ராணுவ ரீதியாகத் திறக்க வேண்டும் என்ற ட்ரம்ப்பின் கோரிக்கையை மேக்ரான் “யதார்த்தமற்றது” என்று நிராகரித்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், நேட்டோ அமைப்பை ஒரு “காகிதப் புலி” (Paper Tiger) என்று வர்ணித்ததுடன், அமெரிக்கா அதிலிருந்து வெளியேறப் போவதாகவும் மிரட்டல் விடுத்தார்.
ஈரான் உடனான ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ போரில் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதே ட்ரம்ப்பின் முதன்மையான கோபமாகக் கருதப்படுகிறது. இந்த விவகாரத்தால் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இடையிலான இராஜதந்திர உறவு தற்போது பெரும் விரிசலைச் சந்தித்துள்ளது.