ஸ்வீடனில் சிறிய ரக விமானம் விபத்து ; 9 பேர் பலி
ஸ்வீடன் நாட்டில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
விமானி உள்பட 9 பேருடன் விமானம் ஸ்வீடன் நாட்டின் ஒரோப்ரோ விமான நிலையம் அருகே வானில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்துள்ளது.
விமானம் தரையில் விழுந்த சில வினாடிகளில் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 8 ஸ்கைடைவிங் வீரர்கள் மற்றும் விமானி என 9 பேரும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களில் உடல்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெற்று வருகின்றது.