கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்: 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
கல்கரிக்கு மேற்கே மலைப் பிரதேசமான கனனாஸ்கிஸ் நாட்டில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஐந்து பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன் ஒரு விமானம் வெள்ளிக்கிழமை இரவு கல்கரிக்கு அருகிலுள்ள ஸ்பிரிங்பேங்க் விமான நிலையத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவின் சால்மன் ஆர்ம் செல்லும் வழியில் புறப்பட்டதாக ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவின் ட்ரெண்டனில் உள்ள கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம் விமானத்துடனான தொடர்பு உள்ளுர் நேரப்படி 9.20pm மணியளவில் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
விமானம் தாமதமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, வின்னிபெக்கில் உள்ள ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் (RCAF) படைப்பிரிவால் தேடுதல் நடத்தப்பட்டது.
தேடுதல் நடவடிக்கையடுத்து படைப்பிரிவு விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்தது, மேலும் ஆல்பர்ட்டா பார்க்ஸ் மவுண்டன் ரெஸ்க்யூவின் உதவியுடன் உயிர் பிழைத்தவர்களைத் தேடினர்.
இருப்பினும், விமானத்தில் இருந்த ஆறு பேரும் இறந்துவிட்டனர், சிங்கிள்டன் கூறினார். மேலும் இறந்தவர்களின் பெயர்களை ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் வெளியிடவில்லை.
“கடினமான நிலப்பரப்பு காரணமாக விமானி மற்றும் பயணிகளின் உடல்களை மீட்பது மிகவும் சவாலானதாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஆறு பேரின் உடல்களும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளன, “கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிங்கிள்டன் கூறினார்.