வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு: சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பு கடித்து சிறுமி பலியான சம்பவம் ஒன்று சவுதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது.
சவுதியில் உள்ள அபா என்னும் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வசிக்கும் , நேற்று வீட்டிலிருக்கும் கழிவறைக்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொடிய விஷமுள்ள விரியன் பாம்பு 6 வயதுடைய சிறுமி தமரா அப்துல் ரகுமான் கடித்துள்ளது.
குறித்த சிறுமியை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளது.
மேலும் இதுதொடர்பில் சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது,
நகரங்களில் பாம்புகள் குறைவாகத்தான் இருக்கும். வீட்டினுள் பாம்பு வந்ததை எங்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. நாட்டின் பாலைவனத்திலும், மலைப்பகுதிகளிலும் தான் அதிகமாக பாம்புகள் இருக்கின்றன.
கொரோனாவின் கடுமையான கட்டுப்பாடு விதிமுறை தளர்த்தப்பட்ட பின், ம்கள் தமரா தற்போது தான் உற்சாகமாக பள்ளிச்சென்று கொண்டிருந்தார் என்று வருத்தத்துடன் குடும்பத்தினர் கூறியுள்ளார்கள்.