மாதுபான கடையில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி! தென்னாப்பிரிக்காவில் சம்பவம்
தென் ஆப்பரிக்க தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் மதுபான கடை உள்ளது.
இந்த மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி எலியாஸ் மாவேலா கூறியதாவது,
நேற்று நள்ளிரவு (09-09-2022) 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. அப்போது, பாரில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், 11 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் கொண்டு செல்லப்பட்டனர். இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.