கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்தியர்களுக்கு உதவ கனடாவில் ஒன்றுகூடிய தெற்காசிய நாட்டவர்கள்
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், ரொரன்றோவில் வாழும் தெற்காசியர்கள் பலர் இந்தியாவுக்கு உதவிவதற்காக ஒன்றுகூடியுள்ளனர்.
இந்தியாவில் நடப்பதைப் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும்போலிருக்கிறது என்கிறார் Steve Gupta. அவர், Gupta Family Foundation என்ற லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர்.
அந்நிறுவனம், 300 ஆக்சிஜன் கருவிகளை வாங்கி இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது. இந்த பயங்கரமான காலகட்டத்தில், நாங்கள் எங்களாலான உதவிகளை செய்ய விரும்புகிறோம் என்று கூறும் குப்தா, இப்போது அனுப்பப்பட்டுள்ள கருவிகள் இந்தியாவை சென்றடைந்ததும், அடுத்தகட்டமாக மீண்டும் பொருட்களை அனுப்ப இருக்கிறோம் என்கிறார்.
Dr. Budhendra Doobay என்னும் அறுவை சிகிச்சையியல் நிபுணர், கருவிகளுக்கான நிதியை திரட்ட உதவியவர். அதுபோக, 25,000 டொலர்கள் மதிப்பிலான அத்தியாவசிய மருந்துகளை இந்தியாவுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளார் அவர்.
ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான மருந்துக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியாவுக்கு மருந்துகளை அனுப்புவது எளிதான விடயமாக தெரியவில்லை. என்றாலும் முயற்சி செய்துகொண்டே இருக்கிறோம் என்கிறார் அவர்.
Guptaவைப்போலவே, Dr. Tanaya Chatterjeeயும் தன் தாய்நாட்டில் நடப்பதைக் கண்டு என்ன செய்வதென தெரியாமல் கலங்கிப்போயிருக்கிறார்.
குற்ற உணர்வுக்கு ஆளாகி, கோபமும் வெறுப்பும் அடைந்துள்ளேன் என்று கூறும் Dr. Tanaya ஒரு மனோவியல் சிகிச்சை நிபுணர். Dr. Tanayaவின் தந்தையான Pronabம் அவரது மற்ற குடும்ப உறவினர்களும் இந்தியாவில் வாழ்கிறார்கள்.
Pronabக்கு பலவீனமான இதயம், அத்துடன், வேறு பல பிரச்சினைகளும் உள்ளன. இந்த நேரத்தில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட, மருத்துவமனைகளில் இடமில்லாமல் அலைந்து திரிந்து ஆறாவதாக ஒரு மருத்துவமனையில் அவருக்கு இடம் கிடைத்திருக்கிறது.
ஆனால் அவரை அழைத்துக்கொண்டு மருத்துவமனைகளில் ஏறியிறங்கிய Dr. Tanayaவின் சகோதரிக்கும் தாய்க்கும் இப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இத்தனை பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ள Dr. Tanaya, தானே மனம் சோர்ந்திருந்தாலும், தன்னைப்போலவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவிவருகிறார்.
அப்படிப் பார்த்தால், நமக்கு கோபம் வருவதும் நல்லதுதான், அது நாம் மற்றவர்கள் மீது அக்கறை காட்டுகிறோம் என்பதைத்தானே அது காட்டுகிறது? என்கிறார் Dr. Tanaya.