வீடு திரும்பினார் சபாநாயகர் நான்சியின் கணவர்
தாக்குதலுக்குள்ளான அமெரிக்க சபாநாயகர் நான்சியின் கணவர் சிகிற்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
கடந்த மாதம் 28ம் திகிதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதனையடுத்து காயமடைந்த பால் பெலோசி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 82 வயதான பால் பெலோசி, ஜுக்கர்பெர்க் சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தலையில் அறுவை சிகிச்சை
தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவர் விரைவில் குணமடைவார் என்று எதிர்பார்ப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 42 வயதான டேவிட் டிபேப் என்பவர், பெலோசியின் சான் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
வீடு புகுந்து தாக்குதல் நடத்திய அந்த நபர் மீது தாக்குதல் மற்றும் கடத்தல் முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அதேசமயம் அமெரிக்காவின் துணை ஜனாதிபதிக்கு அடுத்தபடியாக சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.