இலங்கையில் இந்த பொருளின் விலையும் அதிகரிக்க வாய்ப்பு!
இலங்கையில் அனைத்து ஆடைகளின் விலைகளும் 30 – 31 வீதம் வரை அதிகரிக்க வேண்டிய சாத்தியம் அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணமாக கருத்தப்படுகிறது.
மூலப்பொருட்களுக்கான 40 அடி கொள்கலனுக்கு கப்பல் நிறுவனங்கள் இதுவரை 2 இலட்சம் ரூபாவை அறவிடுகின்றன.
இருப்பினும், தற்போது அது ஒரு மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு பொருளாக இறக்குமதி செய்யும் போது சதுர அடிக்கு அறவிடப்படும் தொகை 6,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக உள்ளூர் ஆடைத் தொழில்துறை கடும் நெருக்க டியை எதிர்நோக்கி வருவதாகவும், இதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழப்பதாகவும் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.