அரச வைத்தியசாலைகளில் 500 தாதிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை!
அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் பணியாற்றும் சுமார் 500 தாதிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கு கீழ் குழந்தைகளுள்ள தாய்மாரும் அடங்கியுள்ளனர். இதனை, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் செயலாளர் எஸ். பி மெதவத்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசிய வைத்தியசாலையில் 200 தாதியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 21 கர்ப்பிணிகளும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் ஐந்து கர்ப்பிணித் தாய்மாரும் கண்டி அரச வைத்தியசாலையில் நான்கு தாதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளதால் தொற்றுக்குள்ளான தாதியருக்கும் பாலூட்டும் தாதியருக்கும் விசேட விடுமுறை வழங்கும்படி தாதியர் சங்கம் சுகாதார அமைச்சை கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.