விரைவில் புதிய பிரதமர்! ஜனாதிபதி கோட்டாபய அறிவிப்பு
இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சரவையும் உருவாக்கப்படும் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
“புதிய பிரதமரையும், அமைச்சரவையையும் இந்த வாரத்தில் நியமிப்பேன். நாடு ஸ்திரமானவுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமையை நீக்குவதற்கு தயாராக இருக்கிறது.
புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கி இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வாய்ப்பு வழங்கப்படும். மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.