கனடாவில் ஒரே இடத்தில் ஒன்றுகூடிய இலங்கையர்கள்; மனதை உருக்கிய சம்பவம்!
கனடாவில், கண் முன்னே மகனை பறிகொடுத்துவிட்டு, திகைத்து நிற்கும் இலங்கை தம்பதிக்கு ஆதரவாக சக இலங்கையர்கள் ஒன்றுகூடினார்கள். இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21). கடந்த ஏப்ரல் 21 அன்று, மகன் இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றனர் Jayasinghe குடும்பம்.
அங்கு தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul. தந்தை அவரிடம், மகனே அங்கே போகாதே என கூறியும், தன் நாய் ஓடிய பாதையில் அதைப் பிடிக்க ஓடியிருக்கிறார் Supul Jayasinghe. அப்போது திடீரென கால் சறுக்கி கடலில் விழுந்திருக்கிறார் Supul. தன்ணீரில் விழுந்த Supul, பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏற முயன்றபோதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, அந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குப் பாறைகள் என. திரும்பத் திரும்ப ஏற முயன்றும் முடியாமல், கடைசியாக விடயம் விபரீதமானதை உணர்ந்து, தன் தந்தையிடம் அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் என கதறினார்.
உடனே சட்டென, தன் கையிலிருந்த நாய் பெல்ட்டை வீசி, மகனிடம் அதை பிடித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் Jayasinghe. ஆனால் Supulஆலும் அதைப் பிடிக்க முடியவில்லை, சொல்லப்போனால், தந்தை Jayasingheவும் வழுக்கி கடலில் விழும் அபாயம் ஏற்பட, தட்டுத்தடுமாறி தந்தை தன்நிலைக்கு வரும்போது, இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது.
அதன்பின்னர் , ஒரு பத்து நிமிடங்களுக்குப் பின் தண்ணீரில் மூழ்கிவிட்டார் Supul. இந்நிலையில், மகனை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவாக, Supul உயிரிழந்த அதே இடத்தில் ஒன்றுகூடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்கள் கனடாவில் வாழ் இலங்கையர்கள்.
நாங்கள் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள்தான், ஆகவேதான் Jayasinghe, மற்றும் அவரது மனைவி Chandima இருவருக்கும் ஆறுதல் தெரிவிப்பதற்காக இங்கு கூடியிருக்கிறோம் என அவர்கள் கூறியுள்ளனர்.