அரையிறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை
இலங்கை அணி உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது. இன்றைய தினம் நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை படு தோல்வியைத் தழுவியது.
இதனால் இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்துள்ளது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க நியுசிலாந்தை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.
இதன்படி களமிறங்கிய நியுசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதில் அணித்தலைவர் மிச்சல் சான்டர் 47 ஓட்டங்களையும் ராச்சின் ரவீந்திரா 32 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மஹிஸ் தீக்சன மற்றும் துஸ்மந்த சமீர ஆகீயோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இதில், கமிந்து மெண்டிஸ் 31 ஓட்டங்களையும் துனித் வெல்லாலகே 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் ராச்சின் ரவீந்திரா நான்கு விக்கெட்களை வீழ்த்தினார். இந்த தோல்வியுடன் இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்துள்ளது.