ரொறன்ரோவில் பெண் ஒருவரின் வெறிச்செயல்: வீடு புகுந்து கைது செய்த பொலிஸ்
ரொறன்ரோவில் ஞாயிறன்று கொலை வழக்கு தொடர்பில் 45 வயது பெண்மணி ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ரொறன்ரோவில் ஞாயிறன்று அதிகாலையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. காக்ஸ்வெல் மற்றும் காஸ்கி அவென்யூ பகுதியில் இருந்து அதிகாலை 4 மணியளவில் அவசர உதவிக்குழுவினருக்கு அழைப்பு சென்றுள்ளது.
இந்த நிலையில், பொலிசார் வெளியிட்ட தகவலில், வாக்குவாதத்தின் இடையே ஆண் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டதாகவும், ஆபத்தான நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த நபர் மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, திங்களன்று பொலிசார் வெளியிட்ட அறிக்கையில், குறித்த நபர் 39 வயதான ஆதம் ஜேம்ஸ் நாஷ் என குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், ஞாயிறன்றே இந்த விவகாரம் தொடர்பில் Jennifer Sacobie என்ற 45 வயது பெண்ணை கைது செய்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தின் பின்னணி என்ன என்பது விசாரணைக்கு பின்னர் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.