அவுஸ்திரேலியா வணிகவளாகமொன்றில் வன்முறை சம்பவம் ; அச்சத்தில் சிதறியோடிய மக்கள்
அவுஸ்திரேலியாவில் வணிகவளாகமொன்றில் நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திகுத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறை சம்பவம் சற்று முன்னர் சிட்னியின் பொன்டி ஜங்சன் எனப்படும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வணிகவளாகமொன்றிற்குள் நபர் ஒருவர் கத்தியுடன் காணப்படுவதாக பொதுமக்களை எச்சரித்துள்ள காவல்துறையினர் பாரிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அந்த பகுதியிலிருந்து பொதுமக்கள் தப்பி வெளியேறியவண்ணமுள்ளதுடன் அவசரசேவை பிரிவினரின் வாகனங்கள் அந்த பகுதிக்கு விரைகின்றன.
பலர் கத்திக்குத்திற்கு இலக்காகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.