பிரான்ஸில் தமிழர்கள் பணிபுரியும் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல்!
பிரான்ஸ் நாட்டில் தமிழ் இளைஞர்கள் பணியாற்றும் உணவகம் ஒன்றில் வெளிநாட்டவர் மீது கொடூரமான முறையில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வால்டுவாஸ் மாவட்டம், அர்ஜோன்தொய் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த வர்த்தகருக்கு சொந்தமான குறித்த உணவகத்தில் தமிழ் இளைஞர்களும் பணியாற்றி வருகின்றதாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் இளைஞர் குழு ஒன்று உணவகத்தில் மது அருந்திக் கொண்டிருந்த வேளையில், திடீரென வந்த இளைஞன் அங்கிருந்தவர் மீது கத்தித்குத்து தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த தாக்குதலுக்கான காரணம் வெளியாகாத நிலையில் , இது நிழல் வர்த்தகம் தொடர்பில் ஏற்பட்ட மோதலாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.