ஸ்காப்ரோ கத்தி குத்து தாக்குதலில் 2 பேர் காயம்
கனடாவின் ஸ்கார்பரோவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவமொன்றில் இரண்டு ஆண்கள் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது குறித்த துல்லியமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஆனால் மார்னிங்சைடு அவென்யூ மற்றும் பிஞ்ச் அவென்யூ கிழக்கு பகுதியில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்கு வெளியே காவல்துறை ஒரு பகுதியை மூடியுள்ளது.
சம்பவத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றுமொரு நபர் சிறு காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.