கொட்டும் மழைக்கு மத்தியில் காதல் ஜோடியை வாழ்த்திய முதலமைச்சர்- ருசிகர சம்பவம்
இந்தியாவின் தமிழகத்தில் பெய்துவரும் கனமழையால் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்றாவது நாளாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகிறார்.
நேற்று துறைமுகம், ராயபுரம், ஆர்.கே.நகர் தொகுதிகளில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டிருந்தார்.
அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்தார்.
இந்நிலையில் நேற்று திருமணம் முடித்த பெரம்பூர் பகுதியை சேர்ந்த மணமக்கள் கௌரிசங்கர்- மஹாலக்ஷ்மி தம்பதியினர் மணக்கோலத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.
முதலமைச்சரை பார்த்ததும் அவரை பார்ப்பதற்காக சென்றனர், முதலமைச்சரும் காரில் இருந்து இறங்கி வந்து புதுமண தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
யாருமே எதிர்பாராத இந்த திடீர் நிகழ்வினால், அங்கிருந்த அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. அங்கு சுமார் 10 நிமிடங்கள் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, தனது ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார்.