வயிற்று வலி என வைத்தியசாலைக்கு சென்ற நபருக்கு எக்ஸ்ரே எடுத்தபோது அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள்
லிதுவேனியாவில் கடுமையான வயிற்று வலி காரணமாக ஒருவர் வைத்தியசலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது வயிற்று பகுதியை வைத்தியர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் இந்த நபரின் வயிற்றுக்குள் சுமார் 1 கிலோ அளவிற்கு உலோகங்களும், நகத்துண்டுகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலோக துண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் 10 சென்டிமீற்றர் அளவில் இருத்ததாகவும். மனித உடலில் இருந்து இவ்வளவு பெரிய உலோக துண்டுகலாய் கண்டெடுப்பது இதுவே முதல் முறை எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது உடலில் இருந்த இந்த உலோக துண்டுகள் வயிற்றின் உள் சுவர்களை கடுமையாக சேதப்படுத்தி உள்ளன.
சுமார் மூன்று மணிநேர சிகிச்சைக்கு பின் அனைத்து உலோக துண்டுகளும் அகற்றப்பட்டன.
தற்போது குறித்த நபர் நலமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.