கனடாவில் Mask-களுக்கு விடை கொடுக்கப்போவது எப்போது?
கனடாவுக்கு தெற்கே அமைந்திருக்கும் அமெரிக்காவில் மக்கள் மாஸ்குகளுக்கு விடை கொடுக்கத் துவங்கிவிட்டார்கள்.
ஏப்ரல் 27 அன்றே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நீங்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டால், வெளியிடங்களில் இருக்கும்போது கூட, நீங்கள் அதிக கூட்டமான இடத்தில் இல்லையென்றால், மாஸ்க் அணியத்தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு அறிவித்துவிட்டார்.
ஆனால், கனடா அந்த நிலையை எட்டுவது எப்போது? Ottawa மருத்துவமனையின் மூத்த அறிவியலாளரான Doug Manuel, மாஸ்குகள் குறித்த விவாதங்கள், தடுப்பூசி எந்த அளவுக்கு போடப்பட்டுள்ளது என்பதைப் பொருத்தது என்கிறார்.
எப்போது சமுதாயத்தில் கொரோனா பரவல் குறைந்த அளவை எட்டுமோ, அப்போதுதான் மாஸ்கை தவிர்ப்பது குறித்தும் யோசிக்க முடியும், அதற்கு முக்கிய தேவை தடுப்பூசி எந்த அளவுக்கு போடப்பட்டுள்ளது என்பதுதான் என்கிறார் அவர்.
70 முதல் 80 சதவிகித மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை எட்டலாம் என்று கூறும் அவர், அப்போது கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்படலாம், ஆக, நோய் பரவல் குறையும் வரை நாம் மாஸ்க் அணிந்துதான் ஆகவேண்டும் என்கிறார் Manuel.
நேற்றைய நிலவரப்படி, கனேடியர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொண்டாயிற்று.
ஒன்ராறியோவைப் பொருத்தவரை அங்கிருக்கும் சூழலைப் பார்த்தால், தடுப்பூசிகள் கொரோனா பரவல் அளவை குறைக்க ஆகத்திலிருந்து செப்டம்பர் வரை ஆகலாம் என்று தோன்றுகிறது என்கிறார் அவர்.
Ottawaவில் கொஞ்சம் சீக்கிரமாகவே அது நடக்கலாம் என்கிறார் Manuel.
ஆனால், Ottawa நகர கவுன்சில், கட்டிடங்களுக்குள் இருக்கும்போது கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும் என்ற கட்டுப்பாட்டை சமீபத்தில்தான் ஆகத்து 26 வரை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.