சுவிட்சர்லாந்தில் புயல் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் அமைதியான இலையுதிர் காலநிலைக்குப் பின்னர் இன்று (24) புயல் வீசும் என்றும் கடுமையான காற்று மற்றும் பரவலான புயல் சேதம் ஏற்படக் கூடும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குளிர் காலம் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் தாழ்வான பகுதிகளில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள்தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் உயர்ந்த பகுதிகளில், சூறாவளி போன்று மணிக்கு 160 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் இருந்து மத்திய பீடபூமி வரை நாட்டின் பெரும் பகுதிகள் பாதிக்கப்படும்.
மத்திய அரசின் அறிக்கையின்படி, வீதி, தொடருந்து மற்றும் விமானப் போக்குவரத்தும் தற்காலிகமாக தடைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலை வெள்ளிக்கிழமை இரவு வரை இது கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.